ismayil singam.blogspot.com

Saturday 7 January 2012

நம் வீட்டின் மேல் “ஆந்தைகளின் அலறல் ஒலி” மரணத்தை ஏற்படுத்தும்?


அகில உலகமெங்கும் ஆந்தைகளின் இரவு நேர அலறல் பாரபட்சமின்றி விரிந்துள்ளது. ஆனால் அண்டார்டிகா பகுதியில் மட்டும் இவைகளுக்கு அனுமதி இல்லை! பழங்காலம் முதலே ஒரு துஷ்டப் பறவையாகவே ஆந்தை கருதப்படுவது அதன் துரதிருஷ்டம். யார்வீட்டு மீதாவது ஆந்தை அமர்ந்து கத்தினால், அந்த வீட்டில் மரணம் சம்பவிக்கும் என்ற நம்பிக்கை இன்றும் பரவலாக இருக்கிறது. இதனால்தான் ஆந்தையின்  அலறல் ஒலிக்கு கூட பஞ்சாங்கத்தில் பலன் பார்க்கும் வழக்கும் இருந்து வருகிறது. எத்தனை பெரியார் வந்தாலும் மாற்றமுடியாத மூடநம்பிக்கையாக உள்ளது.

ஸ்ட்ரிகிடே” (Strigidae) என்ற குடும்பத்தைச் சேர்ந்த ஆந்தைகளில் 200 வகைகள் இருக்கின்றன. இதில் பெரிய ஆந்தை, சின்ன ஆந்தை, புல் ஆந்தை, உமட்டன், சாவுக்  கருவி என 15 வகை இனங்கள் நமது இந்தியப் பிரஜைகள்ஒவ்வொரு வகை ஆந்தைகளும் தனிப்பட்ட ஒலிகளை ஒலிக்கும். அவைகள் யாவும் தன்னுடைய இணைக்கு மேற்படி விஷயத்திற்கு அழைக்கும் ஒலிதான்! மரண அறிவிப்பு இல்லை!!

ஆந்தைகளிலியே கழுகு ஆந்தைகள் தான் மெகா சைஸ்! Eurasian Eagle Owl (Bubo bubo) Blakiston's Fish Owl (Bubo blakistoni) இரண்டரை அடிக்கும் மேல் நீளம், இரக்கையை விரித்தால் 6.6 அடிக்கு மேல், எடையோ 4.5  கிலோ இருக்கும். கழுகாந்தையார் தாக்கினால் குள்ளநரி சைஸ் விலங்குக்கூட இன்டென்சிவ் கேர்யூனிட்டில் அட்மிட் ஆக வேண்டியதுதான். மிகவும் சிறிய சைஸ் ஆந்தையும் இருக்கிறது.Elf Owl (Micrathene whitneyi)  ஒன்லி  30 கிராம் எடைதான்!
ஆந்தைகள் தங்களை அடையாளம் காட்ட,, குரங்குமூஞ்சி, சிறுகுக் கொம்பு, நீளக்காது, ஷட்ரைப்டு சிறகுகள் என்று உறுப்புக்களை வைத்து  பல்வேறு பர்சனாலிடிகள் உண்டு. பெரும்பாலனான ஆந்தைகள்  வட்ட முகம், அதில் முரட்டுச் சிறகுகளாலான இதய வடிவ விசித்திர அலங்காரம், கழுகு போன்ற மூக்கு,, “சந்திரமுகி ஜோதிகாபோன்ற பெரிய கண்களும் ஆந்தைகளுக்கு திகில் தோற்றத்தைத் தருகின்றன.
மங்கலான வெளிச்சத்திலும், இரவிலும் இருட்டிலும் ஆந்தைகள் பிரகாசமாக பார்க்கும். ஆனால் பைனாகுளர் பார்வைதான்! பகலில் சூரியப் பிரகாசம் இதன்  கண்களை கூசச் செய்யும். அப்படியொரு இயற்கை செட்டப் இதற்கு! தூரத்தில் உள்ளவைகளை தெளிவாக பார்க்கும் ஆந்தைகள் மிகவும் அருகில் உள்ளவைகளை பார்க்க இயலாது.

பகல் முழுவதும் தன் கூட்டிலோ, மரக்கிளையிலோ உட்கார்ந்து பாதிக்கண்களை மூடியபடி அரைத்தூக்கத்தில் கழிக்கும். இரவு வந்து விட்டால் புத்துணர்ச்சி பெற்று, சீவி சிங்காரித்து தொழிலுக்குக் கிளம்பி  விடும். சகட்டு மேனிக்கு இரை தேடுவது தான் ஆந்தையின் முக்கிய தொழில்! சில வகை ஆந்தைகள் பகலிலும் வேட்டைக்கு கிளம்பிவிடும் Burrowing Owl (Speotyto cunicularia), Short-eared Owl (Asio flammeus). தன்னுடைய நாசர்அலகால் கொத்தி, கத்திரிக்கோல் அசைவு போல் இரண்டு அலகுகளையும் அசைத்து ஸ்வாக செய்துவிடும் தன் இரையை! ஆந்தையால் விழுங்கப்படும் ஜீவராசிகளின் முடி, சிறகு, எலும்பு, மண்டை ஓடு எதுவும் ஜீரணிக்கப்படுவதில்லை. வயிற்றுக்குள்ளேயே சின்ன உருண்டைகளாக்கி நாசூக்காக வெளியே தள்ளி விடும். ஆந்தையின் வசிப்பிடத்தில் இந்த ஜட்டங்களைக் கொண்ட உருண்டைகளை நிறைய பார்க்கலாம்.
மற்ற பறவைகள் போல் தன் கூட்டைக் கூட கலைநயத்துடன் அமைக்க ஆந்தைகள் ஆர்வம் கொள்வதில்லை, அவ்வளவு சோம்பேறித்தனம்பாழடைந்த  மண்டபம், கோபுரம், இடிப்பட்ட வீடு, குகை,மனித நடமாட்டம் இல்லாத பகுதியில் மரங்களின் பொந்துகள் என அரைகுறை வீட்டை வசந்தமாளிகையாக நினைத்து வாழும்.

இவற்றின் மெனு கார்டில் தவளை, வவ்வால், குருவி, நத்தை, பூச்சிகள் என பல ஐட்டங்கள் உண்டு.இதைவிட ஆந்தையின் ஆசை உணவு, அதன் நாக்கில் எச்சில் ஊறச் செய்யும் விருந்து எலிதான். இரண்டும் இரவுவாசி என்பதால் அப்படியொரு ஏழாம் பொருத்தம். ரொம்ப உயரத்திலிருந்தே  சின்ன சுண்டெலியின் நடமாட்டத்தைக் கூட ஆந்தையார் கண்காணித்து விடுவார்

ரோமம் போன்ற சிறகுள் மிருதுவாக இருப்பதால் சத்தம்மில்லாமல் பறந்து வந்து உணவின் மீதே லேண்டிங் ஆவார். மீன் பிடித்து சாப்பிடும் ஆந்தைகளும் உண்டு. வெளிச்சத்தால் கவரப்படும் விதவிதமான பூச்சிகள், ஆந்தையின் டிபன். இதற்காகவே லைட் கம்பத்தில் வெயிட் செய்து கண்ணில் படுகிற பூச்சிகளை எல்லாம் டேஸ்ட் பார்த்துவிடும். உட்கார்ந்த பொசிஷனிலேயே நாலா பக்கமும் தலையைத் திருப்பி நாட்டு நடப்புகளை கவனிப்பதில் கில்லாடி  ஜூனியர் விகடன்” ? 270 டிகிரி கோண இதன் தலையசைப்பை சில நிமிடம் பார்த்துகொண்டிருந்தால் ஹிப்னாடிசம் செய்தது போல நமக்கே தலை சுற்றும்.
ஆந்தைகள்  தம் காதல்களை பிறந்த 6 மாதத்திலேயே ஆரம்பித்துவிடுகின்றன். பகலில் விழித்து, வேலை பார்த்துக் களைக்கும் மனிதன் உட்பட எல்லா ஜீவன்களுக்கு இரவில் தாம்பத்தியக் கொண்டாட்டம் வழக்கம். ஆனால், இரவில் பிசியாக இருக்கும் ஆந்தைகள், இனப்பெருக்கத்தை பகலில் வைத்துக் கொள்வதில்லை. வேலையோடு வேலையாக இரவில்தான்! ஆண் ஆந்தை உயரமான இடத்தில் அமர்ந்து கொண்டு எங்கோ இருக்கும் வித்தியாச கிறக்கத்தில் இந்த அழைப்பு இருப்பதால் காதலியும் புரிந்து கொள்வாள். ஏக்கத்தோடு பதில் கானம் புறப்படும். முடிவில் டூயட்தான்.
இரண்டு நிமிட  டூயட்டுக்குப் பின் கதகதப்பாய் அருகருகே உரசியபடி அமர்ந்து கொண்டிருக்கும். இதில் காதல் நெருப்பு வேகமாகப் பற்றிக் கொள்ள, கூச்சத்துக்கும் குறைவிருக்காது. அதே நேரம், கிடைத்த சந்தர்ப்பத்தை விடாமல், அலகால் செல்லாமாய் உடம்பு முழுவதும் முத்த மழை பொழியும். சட்டென்று சிறுகுகளை சிலுப்பி தோற்றத்தில் அழகைக் கூட்டும். சில அடி உயரம் எம்பி எம்பிப் பறந்தபடி பாட்டு பாடிக் கொண்டு பின் இணை சேரும். ஆந்தை தன் கூட்டில் மூன்று நாட்களுக்கு ஒரு முட்டை வீதம் ஏழு முட்டைகள் போடும். ஐந்து வாரங்களில் முட்டைகள் பொறித்து வெளிப்படும் குஞ்சுகள் வெவ்வேறு தினுசுகளில் இருக்கும்

ஒரு ஆந்தை ஜோடி நீண்ட காலம் ஆளை மாற்றாமல் இருப்பதால் குஞ்சுகளை மூன்று மாதங்கள் பாசமாமாக வளர்க்கும்

No comments:

Post a Comment